தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முசிறி, தா.பேட்டை ஒன்றியத்தில் ரூ.3.61 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி

முசிறி, ஜூன் 12: திருச்சி மாவட்டம், முசிறி மற்றும் தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.61 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கிராமப்புற பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என முசிறி தொகுதி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதை எடுத்து தொகுதி எம்எல்ஏ நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு கவனத்திற்கு பொதுமக்களின் கோரிக்கையை கொண்டு சென்றார் இதையடுத்து அமைச்சர் நேரு பரிந்துரையின் பேரில் தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.3.61 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.

Advertisement

இதையடுத்து நடைபெற்ற வளர்ச்சித் திட்ட துவக்க பணிகளுக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து தா.பேட்டை ஒன்றியத்தில் பூலாஞ்சேரி ஊராட்சி பாப்பாபட்டி முதல் பனங்காடு வரை 138.09 இலட்சம் மதிப்பீட்டிலும், பூலாஞ்சேரி முதல் சேருகுடி வரை 134.22 லட்சம் மதிப்பீட்டிலும், தாண்டவம்பட்டி முதல் கருப்பம்பட்டி சாலை வரை ரூ.45.76 லட்சம் மதிப்பீட்டிலும், முசிறி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல வெள்ளூர் பகுதியில் 41 லட்சம் மதிப்பீட்டிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

அப்போது பூலாஞ்சேரியில் சமுதாயக்கூடம் அமைத்து தரவும், வெள்ளூர் பகுதியில் சாலை, குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடன் விழாவிற்கு வந்திருந்த ஒன்றிய ஆணையர்கள், பொறியாளர்களை அழைத்து பொதுமக்களின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி, சேகரன், நகர செயலாளர் தக்காளி தங்கராசு, நிர்வாகி பிரபு, நிர்வாகிகள் சரவணன் நடேசன், செல்வம், மகாமணி, முசிறி ஊராட்சி ஒன்றிய ஆணையர் தர், பூலாஞ்சேரி ஊராட்சி மன்ற செயலார் ஜெயராஜ், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News