தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரசார் ஆர்ப்பாட்டம் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து

குடியாத்தம், ஜூலை 11: குடியாத்தத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகையை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று பல்ேவறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நகராட்சி கவுன்சிலர் விஜயன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாஜ மற்றும் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, அண்ணாமலை உருவ பொம்மை தீ வைத்து எரித்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குடியாத்தம் டவுன் போலீசார் உடனே உருவ பொம்மை மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Related News