தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலம்

 

Advertisement

தஞ்சாவூர், அக்.8: ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி தஞ்சாவூரில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக தஞ்சாவூர் கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து புறப்பட்டு மாநகராட்சி காந்தி சிலை வரையில் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார்.

தஞ்சை மாவட்ட மேலிட பொறுப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பேராவூரணி சிங்காரம் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் அன்பரசன், மாநில துணைத்தலைவர் பண்ணவயல் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் குணா பரமேஸ்வரி, பட்டுக்கோட்டை நகரத் தலைவர் வழக்கறிஞர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜு, கதர் வெங்கடேசன், ஊடக பிரிவுத் தலைவர் பிரபு, வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி, இப்ராஹிம்ஷா, சுரேஷ், மாநகர, மாவட்ட துணைத்தலைவர் செந்தில் பழனிவேல், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement