தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல்: 130 பேர் கைது

 

Advertisement

சிவகங்கை, ஆக. 2: சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர். ஒன்றிய மோடி அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்தும், பட்ஜெட் ஏழை நடுத்தர மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளிப்பதை கண்டித்தும் மறியல் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசலில் தொடங்கி தலைமை தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட செயலாளர் (பொ) கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சாத்தையா, மாவட்ட துணைச் செயலாளர் கோபால் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நம்புராஜன், நகர் செயலாளர் மதி, இ.கம்யூனிஸ்ட் நகர் செயலாளர் மருது, மாதர் சங்க மாநில செயலாளர் கண்ணகி, ராமச்சந்திரன், கங்கைசேகரன், சகாயம், மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மறியலில் ஈடுபட்ட கட்சியினர் 130 பேரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

Related News