தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆந்திராவுக்கு சுற்றுலா சென்றபோது மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவி பலி: 7 பேர் படுகாயம்

 

Advertisement

கும்மிடிப்பூண்டி, மார்ச் 24: ஆந்திராவுக்கு சுற்றுலா சென்றபோது, கும்மிடிப்பூண்டி அருகே மரத்தில் கார் மோதி கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் முகமது ஆவேஷ் (26). இவர் தனது தங்கை ஆலியா பேகம் (20), மற்றும் நண்பர்கள் சம்ரீன் (20), தீனா (21), ஸ்ரீமான் (22), யோகேஸ்வரன் (20), மாதேஷ் (21) மற்றும் பெஞ்சமின் (26) ஆகியோருடன் ஒரே காரில் ஆந்திர மாநிலம் தடா நீர் வீழ்ச்சிக்கு சென்னையில் இருந்து நேற்று சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.

காரை முகமது ஆவேஷ் ஓட்டிச் சென்றார். கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக-ஆந்திர எல்லையான பெரியவேடு என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தென்னை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவியான சம்ரீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் எளாவூர் சோதனைச் சாவடியில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஆந்திர மாநிலம் தடா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News