தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி

திருச்சி, மே 15: உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி கனவு நிகழ்ச்சி திருச்சியில் நேற்றும் (மே 14), நாளையும் (மே 16) ஆகிய நாட்களில் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் நடைபெற்று வருகிறது.

Advertisement

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024ம் கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் மற்றும் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத 3658 மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உயர்கல்வி படிப்பைத் தொடர தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள கலையரங்கத்தில் நடைபெற்றது.

திருச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களான திருச்சி நகரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மணிகண்டம், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மற்றும் அந்தநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி நேற்றும், லால்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களான லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம், உப்பிலியபுரம் மற்றும் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி நாளையும் நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் கல்லூரிக் கனவு வழிகாட்டி கையேட்டினை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சுரேஷ், முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரயா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம், உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement

Related News