தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டுக்கோட்டை மாணவர்களுக்கு கல்லூரிக்கனவு வழிகாட்டி நிகழ்ச்சி

பட்டுக்கோட்டை, மே 21: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை மாதா கோயில் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்டத்தில் 2024 - 2025 ம் கல்வியாண்டில் பிளஸ்2 பயின்ற மாணவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதற்கான கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, திருவோணம், மற்றும் சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் கரம்பயம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன் வரவேற்றார்.

Advertisement

நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை கலந்து கொண்டு திட்ட விளக்கவுரையாற்றினார். நிகழ்ச்சியில் துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொ ண்டு சட்டம், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் உயர்கல்வி வழிகாட்டுதல்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு அரங்குகள் அமைத்து மாணவர்களுக்கு வழிகாட்டினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரிக் கனவு கையேடு வழங்கப்பட்டது. உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகை மற்றும் உயர்கல்வியில் சேர்வதற்கு வங்கிகள் வழங்கும் கல்விக்கடன் குறித்து விள க்கமளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவ ட்டக்கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பழனிவேல், மாவட்டக் கல்லூரி கனவு ஒருங்கிணைப்பாளர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் ரமேஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (மேல்நிலை) தெட்சிணாமூர்த்தி, தம்பிக்கோட்டை வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மணியரசன், முதன்மை கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் மாதவன், முதுகலை ஆசிரியர்கள் மாணிக்கம், கணேசமூர்த்தி, குமரவேல் மற்றும் ஆசிரியர்கள் செயல்பட்டனர்.

Advertisement

Related News