தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊரக வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் நேரில் ஆய்வு

 

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரயாங்குப்பம், செஞ்சி பானம்பாக்கம், காவாங்கொளத்தூர், சத்தரை, வயலூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், பிரயாங்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2024-25ன் கீழ் ரூ.6.4 லட்சம் மதிப்பீட்டில் நர்சரி அமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும், செஞ்சிபானம்பாக்கம், சத்தரை ஆகிய ஊராட்சியில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் 66 வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்தும்,

காவாங்கொளத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.70 லட்சம் மதிப்பீட்டில் பிலிப்ஸ்புரம் - வேப்பஞ்செட்டி வரை சாலை பணிகள் குறித்தும் வயலூர் ஊராட்சியில் சூரகாபுரம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.42 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை பணியை பார்வையிட்டு தடுப்பணைக்கு வரத்து குழாயை சீரமைத்து சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பிரதாப் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் கவுசல்யா, கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, சவுந்தரி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.