தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு விரைந்து முடிக்க உத்தரவு துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில்

திருவண்ணாமலை, ஜூலை 3: துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் நடைபெறும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு அரசு துறைகளில் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிவாகை ஊராட்சியில் 2024- 25ம் நிதியாண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யபடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், வள்ளிவாகை ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.53.52 லட்சம் மதிப்பீட்டில் வள்ளிநகர் முதல் வேடியப்பன் நகர் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டு சாலை முறையாக அமைக்கப்படுகிறதா என பரிசோதனை கருவிகளின் மூலம் ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, சானாந்தல் ஊராட்சியில் 2024- 25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.68 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் குறித்தும், எவ்வளவு நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என கேட்டறிந்து மரக்கன்றினை முறையாக பாரமரித்து வளர்க்க வேண்டும் என்றார்.

முன்னதாக, மல்லவாடி ஊராட்சியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த மறுவாழ்வு இல்லம் 1973ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில், தற்போது 33 தொழுநோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தங்கும் வசதி மற்றும் உணவின் தரத்தை ஆய்வு செய்த கலெக்டர், தொழுநோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related News