தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை கலெக்டர் நேரில் ஆய்வு

கரூர், ஜூலை 29: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆண்டான்கோயில் தடுப்பணையில் ஒரே நாளில் 1883 கன அடி தண்ணீர் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. அணை முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதுமாக அமராவதி ஆற்றில் கடந்த 19ம் தேதி முதல் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கடந்த 21ம் தேதி கரூர் நகரை கடந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து சென்றது.

கரூர் மாநகராட்சியை ஒட்டிய ஆண்டான்கோயில் தடுப்பணைக்கு கடந்த 21ம் தேதி 2184 கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக குறைய துவங்கியது. நேற்று காலை 306 கன அடி தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 2189 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

அந்த தண்ணீர் கரூர் நகரை கடந்து திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றில் கலந்து மாயனூர் கதவணையை கடந்து காவிரி ஆற்றில் டெல்டா மாவட்டத்தை நோக்கி செல்கிறது. மாயனூர் கதவணைக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1162 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அவை முழுவதுமாக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அமராவதி அணையிலிருந்து திறக்கப்பட்ட அளவை எட்டிவிடும் என நீர்வள துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News