தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் பழங்குடி இருளர் மாணவிக்கு பட்டப்படிப்பு படிக்க ஆணையுடன் உதவித்தொகை ஆட்சியர் வழங்கினார்

 

Advertisement

செஞ்சி, ஜூன் 26: திண்டிவனம் பழங்குடி இருளர் வகுப்பினை சேர்ந்த மாணவிக்கு கல்லூரியில் படிப்பதற்கான ஆணை மற்றும் கல்வி உதவித்தொகையை ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும், தற்போது 24 வயது நிறைவுற்றதால் கல்லூரியில் சேர முடியவில்லை எனவும், தனக்கு தமிழ் மீது அதிக ஆர்வம் இருப்பதாலும் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக பணிபுரிய விரும்புகிறேன் என்றும், எனக்கு நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை பிஏ தமிழ் பட்டப்படிப்பு படித்திடும் வகையில் கல்லூரியில் சேர்க்க உதவி புரிந்திட வேண்டும் என கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் வழங்கினார்.

அதன் அடிப்படையில் நேற்று வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் திண்டிவனம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி இருளர் வகுப்பைச் சேர்ந்த வித்யாவுக்கு சிறப்பு சேர்க்கையின் அடிப்படையில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி அறிவியல் கல்லூரியில் இளங்கலை பிஏ தமிழ் படிப்பு படிப்பதற்கான ஆணை வழங்கப்பட்டதுடன் கல்வி உதவித்தொகை மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையை ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் செஞ்சி வருவாய் வட்டாட்சியர் துரைச்செல்வன், திண்டிவனம் கோவிந்தசாமி கலைக்கல்லூரி முதல்வர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமதாஸ், இளங்கோவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement

Related News