தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரசவ கால பாதிப்பு தவிர்க்க உடனடியாக சிகிச்சை

கோவை, நவ.27: கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, சிகிச்சை முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ரத்த சோகை, போதுமான ஊட்டச்சத்து, உடல் எடை குறைவு போன்ற பாதிப்புகள் உள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், அதை தீர்க்க அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல பிரிவினர் தீவிரம் காட்ட வேண்டும். கூடுதல் நோய் மற்றும் உயரம் குறைவாக உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கையான முறையில் பிரசவம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது.

Advertisement

மேலும் முதல் குழந்தைக்கு சிசேரியன் செய்தவர்களுக்கு இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்து பிரசவத்திற்கு வரும் போது சிசேரியன் மூலமாக குழந்தை பெற வேண்டிய நிலைமை இருக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயற்கையான முறையில் பிரசவம் நடக்க வாய்ப்புள்ள கர்ப்பிணிகளை மட்டுமே வைத்து சிகிச்சை தர வேண்டும். அபாய கட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைக்க வேண்டும். அபாய கட்ட கர்ப்பிணிகளுக்கு உடனடியாக சிகிச்சை, தொடர் மருத்துவ கண்காணிப்பு தேவையாக இருக்கிறது.

எனவே பிரசவ காலத்திற்கு உரிய காலத்திற்கு முன்பாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என வட்டார சுகாதார மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராமம் நகர்ப்பகுதியில் சிசேரியன் குறைக்கும் வகையில் கர்ப்பிணிகளுக்கு உரிய ஆலோசனை, உணவு பழக்கம் குறித்து சொல்லி தர வேண்டும் என சுகாதார துறையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News