தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி; மாணவன் கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை

கோவை, நவ.27: கோவை ஒண்டிப்புதூரில் 2 ஆண்டுக்கு முன்பு நடந்த மாணவன் கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (68). லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரணவ் (17). இவர் கடந்த 2024ம் ஆண்டு சின்ன வேடம்பட்டியில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது சக மாணவி ஒருவர் பிரணவ்வை கேலி, கிண்டல் செய்துள்ளார். இதனால் பிரணவ்வுக்கும், அந்த மாணவிக்கும் தகராறு ஏற்பட்டது. இது அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் 17 வயதான சகோதரனுக்கு தெரியவந்தது.

Advertisement

அடிக்கடி பிரணவ் மற்றும் மாணவியின் சகோதரர் மோதிக்கொண்டனர். இந்நிலையில், கடந்த 17-2-2024ம் ஆண்டு காலையில் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பேக்கரி முன்பு பிரணவ்வை, அந்த மாணவியின் சகோதரர் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை சிறார் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண் ராஜ்குமார், கொலை வழக்கில் 17 வயது சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Advertisement

Related News