தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வனப்பகுதி தோட்டங்களில் விதி மீறல்கள் கண்டறிய உத்தரவு

கோவை,செப். 14: கோவை மாவட்டத்தில் வனப்பகுதி தோட்டங்களில் விதிமீறல்களை கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், சூரிய மின்வேலியில் நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்துவது பல்வேறு இடங்களில் நடக்கிறது. கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நேரடி மின்சாரம் பயன்படுத்திய நிலையில், மின் வேலியில் சிக்கி யானைகள் இறப்பது அவ்வப்போது நடக்கிறது. வன எல்லை கிராமங்களில் விவசாய தோட்டம், பண்ணை, கல்வி நிறுவனங்கள், ரிசார்ட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய மின் வேலியை முறையாக பயன்படுத்தவேண்டும். நேரடியாக மின்சாரத்தை சூரிய மின்வேலியில் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மாவட்டத்தில் ரிசார்ட்ஸ், பண்ணை, கல்வி நிறுவனங்களில் மின்வாரியத்தினர் ஆய்வு நடத்தி நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்தினால் அந்த மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அந்த தோட்டங்களில், நிறுவனங்களில் மின் இணைப்பு மறுபடியும் வழங்க கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில், ‘‘நேரடியாக மின்சாரத்தை சிலர், சூரிய மின்வேலியில் பயன்படுத்துவதாக அவ்வப்போது புகார்கள் வருகிறது.மின் வாரியத்தில் இதுதொடர்பாக புகார் தெரிவித்திருக்கிறோம். யானைகள், சூரிய மின்வேலியை கடந்து விடுகின்றன. காட்டு பன்றிகளும் எளிதாக தோட்டத்திற்குள் புகுந்து விடுகின்றன எனக்கூறி சிலர், நேரடியாக மின்சாரத்தை பயன்படுத்துவதாக தெரிகிறது.இதனால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தை அவர்கள் உணரவில்லை. மின்வேலி பயன்பாடு குறித்து வன எல்லை கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Advertisement

Related News