தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டுப்பாளையத்தில் மதுபோதையில் மினி பஸ் இயக்கிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மேட்டுப்பாளையம், டிச. 12: மேட்டுப்பாளையத்தில் மது போதையில் மினி பேருந்தை இயக்கிய டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் போதையில் இருப்பது தெரிய வந்தால் டிரைவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளுக்கு 10க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே நேற்று காலை காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தின் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் வந்தது.

Advertisement

இதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வந்தடைந்த பேருந்தை மடக்கிய போலீசார், டிரைவரை பிடித்து மது அருந்தி உள்ளாரா? என பரிசோதனை செய்தனர். அப்போது, அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் மதுபோதையில் இருந்த டிரைவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமனன் கூறுகையில், ‘‘மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவது சட்டப்படி குற்றம். இனிவரும் காலங்களில் இதுபோன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டிரைவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.

அதேபோல் பேருந்தை கண்காணிக்க தவறிய உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement