தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

50 பக்க நகல் வழங்கல் பட்டுக்கூடுகள் கிலோ ரூ.795க்கு ஏலம்

கோவை, டிச.11: கோவை பட்டுக்கூடு அங்காடி மையத்தில் நடந்த ஏலத்தில் பட்டுக்கூடுகள் கிலோ ரூ.795 வரை ஏலம் போனாதல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவையில் பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. இங்கு திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் 12 மணியளவில் வெண்பட்டுக்கூடுகள் ஏலம் நடைபெறும்.

Advertisement

இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, உடுமலை, திண்டுக்கல், கோபி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகிறார்கள். இவர்களின் பட்டுக்கூடு தினசரி ஏலமிடப்பட்டு, நூற்பாளர்களுக்கு வழங்கப்படுகிறது. தினமும் ஒரு டன் அளவிற்கு பட்டுக்கூடுகள் கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் பட்டுக்கூடுகள் வரத்து குறைந்தது. தவிர, தரமான பட்டுக்கூடுகளும் வரவில்லை. இதனால், கடந்த வாரம் பட்டுக்கூடுகள் சராசரியாக கிலோ ரூ.700-க்கு ஏலம் போனது. இந்நிலையில், கோவை பட்டுக்கூடு அங்காடிக்கு தரமான பட்டுக்கூடுகள் கோவை, ஈரோடு, கோபி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று கொண்டுவரப்பட்டு ஏலம் விடப்பட்டது.

இதில், ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.795-க்கும், குறைந்த பட்சமாக ரூ.580-க்கும் ஏலம் போனது.

மேலும், நேற்று நடந்த ஏலத்தில் 8 விவசாயிகள் பங்கேற்று மொத்தம் 567 கிலோ பட்டுக்கூடுகளை கொண்டு வந்தனர். அந்த பட்டுக்கூடுகள் 4 லட்சத்து 14 ஆயிரத்துக்கு 362 ரூபாய்க்கு ஏலம் போனது. இதன் சராசரி விலை கிலோ ரூ.730-ஆக இருந்தது.

Advertisement

Related News