தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கு கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம்

கோவை, டிச. 11: கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் தீவிர ஏற்பாடு செய்துவருகின்றனர். கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2ம் தேதி இரவு மதுரையை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த தனது காதலருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த 3 வாலிபர்கள் மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச்சென்று கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

Advertisement

இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சகோதரர்கள் சதீஷ் என்கிற கருப்பசாமி (30), காளி என்கிற காளீஸ்வரன் (21), இவர்களது உறவினர் மதுரை மாவட்டம் கருப்பாயூரணியை சேர்ந்த குணா என்கிற தவசி (20) ஆகிய 3 பேர் துடியலூரில் பதுங்கி இருந்தபோது போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், கோவை மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சிந்து முன்னிலையில் கடந்த 2ம் தேதி 50 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே கைதான 3 பேர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போலீசார் 3 பேர் மீதும் 2வது கட்டமாக கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பாலியல் வழக்கில் கைதான 3 பேர் மீதும் முதல்கட்டமாக 50 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் சம்பவம் நடந்த தொடக்கத்தில் இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது வரை அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளது. நடந்த சம்பவங்கள், வாக்கு மூலங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement