வரும் 5ம் ேததி டாஸ்மாக் கடைகளுக்கு லீவு
கோவை, செப்.3: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற மது விற்பனை நிலையங்கள் வரும் 5ம் தேதி மீலாடி நபி தினத்தன்று மூட உத்திரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு முரணாக அன்றைய தினம் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement