தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மசக்காளிபாளையம் ரேஷன் கடையில் அரிசி திருட்டு அதிகாரிகள் விசாரணை

கோவை, செப். 3: கோவை ஹோப்காலேஜ் அடுத்த மசக்காளிபாளையம் விஸ்வநாதன் லேஅவுட்டில், சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலைக்கு உட்பட்ட ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், நேற்று கடையின் முன்பு இருசக்கர வாகனத்தில் வெள்ளை நிற சாக்கு மூட்டையில் ரேஷன் அரிசியை ஒருவர் வெளிப்படையாக ஏற்றிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கடை விற்பனையாளரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கோழிகளுக்கு தீவனமாக அரிசி கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கடைக்குள் சிலர் ரேஷன் அரிசி மூட்டையை பிரித்து, தையல் போடும் இயந்திரத்தை பயன்படுத்தி ஒரு மூட்டையில் இருந்து மற்றொரு மூட்டைக்கு ரேஷன் அரிசியை மாற்றிக்கொண்டிருந்தனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து அரிசி மூட்டையுடன் தப்பினர். இது தொடர்பாக கடை விற்பனையாளர் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். கடத்தி செல்லப்பட்ட அரிசி மூட்டைகளை கண்டுப்பிடித்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதனிடையே இந்த புகார் தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

Related News