தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆடி திருவாதிரையை முன்னிட்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் சிலைகள், வளாகங்கள் தூய்மை பணி மும்முரம்

 

ஜெயங்கொண்டம், ஜூலை 14: ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் தலைமையிடமாக வைத்து கங்கை முதல் கடாரம் (மலேசியா) வரை ஆட்சி புரிந்ததன் நினைவாக கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அதாவது மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த தினமான ஆடி மாத திருவாதிரை நட்சத்திரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இது அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிதிருவாதிரையை முன்னிட்டு கோயில் வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து கோபுரங்கள், உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் உள்ள தொல்லியல் துறை மூலம் புல் வெட்டுதல் தரையை சமன்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வருடம் பாரத பிரதமர் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், வெளிப்பிரகாரத்தில் தென்புறம் உள்ள தரை சமன்படுத்தப்பட்டும் தூய்மைப்படுத்தப்பட்டும் வருகின்றன.பெரிய கோபுரம் அருகில் உள்ள விநாயகர் கோவில் கோபுரம் பெரிய நந்தி சிலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தூய்மைப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.