தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பேராவூரணி , ஜூன். 6: தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மாவட்ட சிஐடியு மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மீன்பிடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பெரியண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு முன்னாள் மாவட்டச் செயலாளர் மனோகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்கம் அமைக்கப்படாத மீனவர் கிராமங்களில் உடனடியாக கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும். மீனவர் கிராமங்களில் கடற்கரை ஓர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மீன்பிடி தடைக்கால நிவாரணம் விடுபட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கருப்பையா ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் கர்த்தர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சுப்பிரமணியன், நாகூர் பிச்சை, மாவட்ட துணைத்தலைவர் நாகேந்திரன், மாவட்ட துணை பொருளாளர் நிஜாமுதீன் சிபிஎம் கிளைச் செயலாளர் அகிலன் மற்றும் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Related News