தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவாரம் பகுதியில் குப்புற கவிழ்ந்த குண்டு மிளகாய் விவசாயம்

தேவாரம், மே 27: தேவாரம் பகுதியில் குண்டு மிளகாய் விவசாயம் குறைந்து உள்ளது. இதனை ஊக்கப்படுத்திட தோட்டக்கலைத் துறை முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேவாரம், பண்ணைபுரம், கோம்பை, மலையடிவாரங்களை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் அதிகமான ஏக்கர் பரப்பில் குண்டு மிளகாய் விவசாயம் செய்யப்பட்டது. மிளகாய் குறிப்பிட்ட காலங்களில் பறிக்காதபோது, மிளகாய் வத்தலாக மாறிவிடும்.

Advertisement

இந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, குண்டு மிளகாய், விவசாயம் குறைந்துள்ளது. காரணம் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டம், குறைந்துபோனதும், கிணறுகளில் தண்ணீர் அதிகம் இல்லாததாலும் குண்டுமிளகாய் விவசாயம் குறைவிற்கு காரணமாகும். மேலும், மிளகாய் வளர்ப்பை, ஊக்குவிக்க வேண்டிய தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனால், குண்டு மிளகாய் விவசாயம் செய்த விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசாக போட்டு உள்ளனர். இதனால் கூலித்தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் விவசாய வருமானமும் குறைந்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே இப்பகுதியில் குண்டு மிளகாய் விவசாயத்தை ஊக்குவிக்க தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டுமென விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement

Related News