தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிப்ரவரி 21ம்தேதி தோகைமலை பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

 

Advertisement

கரூர், பிப். 18: தோகைமலை பகுதியில் பிப்ரவரி 21ம்தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 8 வட்டாரங்களில் 40 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில், 15 துறைகள் சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், பிப்ரவரி 21ம்தேதி அன்று தோகைமலை வட்டாரத்தில் நெய்தலூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வடசேரி கிராம ஊராட்சியில் காவல்காரன்பட்டி சமூதாயக் கூடத்திலும், பொருந்தலூர் கிராம ஊராட்சி பொருந்தலூர் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியிலும், கழுகூர் கிராம ஊராட்சி கழுகூர் அரசு ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளியிலும், புத்து£ர் கிராம ஊராட்சி சின்னப்புதூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement