தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மேட்டூர் அணையில் நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஆய்வு

மேட்டூர், ஜூன் 4: மேட்டூர் அணையின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை, நீர்வளத்துறையின் நீரியல் ஆராய்ச்சி மற்றும் தரக்கட்டுப்பாட்டு தலைமை பொறியாளர் சுந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார். மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு பாலத்தின் தூண்கள் மற்றும் வளைவுகளை பலப்படுத்தும் பணி, சுமார் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. அதேபோல், கீழ்மட்ட மதகிலிருந்து மேல்மட்ட மதகிற்கு செல்லும் சுரங்க கால்வாய் 183 மீட்டர் நீளத்திற்கு ரூ.11 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. மேலும் ஆங்கிலேயர் காலத்து ராட்சத மதகுகளை மாற்றி, புதியதாக பொருத்தும் பணி மற்றும் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, சென்னை நீரியல் ஆராய்ச்சி மற்றும் தர கட்டுப்பாட்டு தலைமை பொறியாளர் சுந்தரராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

அப்போது, திருச்சி மண்டல தர கட்டுப்பாட்டு செயற்பொறியாளர் புகழேந்தி, உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, உதவி பொறியாளர் லதா ஆகியோர், 16 கண் பாலம் பகுதியிலும், வலதுகரை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுரங்க வாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, மேட்டூர் அணையில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேட்டூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சதீஷ்குமார் ஆகியோர் விளக்கி கூறினர்.

Advertisement

Related News