தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிளாம்பாக்கம் செல்வோர் வசதிக்காக தாம்பரம்-கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கம்

சென்னை, செப்.30: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செல்ல ஏதுவாக நேற்று இரவு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை, ஆயுதப் பூஜை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். குறிப்பாக, பேருந்து மூலமாக சொந்த ஊர் செல்லும் மக்கள், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பயணம் செய்வார்கள். அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், எளிதில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் செல்ல ஏதுவாக, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு இரு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து நேற்று இரவு 7.45 மணிக்கு சிறப்பு மின்சார ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு மின்சார ரயில் 20 நிமிடத்தில் கூடுவாஞ்சேரி சென்றடைந்தது. மற்றொரு சிறப்பு மின்சார ரயில் இரவு 8.10 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கூடுவாஞ்சேரிக்கு சென்றது. இதனால், பயணிகள் எளிதாக பேருந்து நிலையம் செல்ல முடிந்தது.

Advertisement

Advertisement