தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நெரிசலை கட்டுப்படுத்த குழு: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை

அண்ணாநகர், ஆக.27: தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளியூர்களில் இருந்து விளாங்காய், கம்பு மற்றும் சோளம், பேரிக்காய், வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் லாரிகளில் வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளன. இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சரியான நேரத்தில் மார்க்கெட் வளாகத்திற்குள் செல்ல முடியவில்லை எனவும், இதனால், வியாபாரம் பாதிப்பதாகவும் வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகத்தில் முறையிட்டனர்.

Advertisement

இதனையடுத்து வியாபாரிகளின் நலன் கருதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்தவும் போக்குவரத்து உதவி ஆணையர் ரவி மற்றும் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுந்தரம் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் நேற்று காலை முதல் கோயம்பேடு மார்க்கெட் அருகே பணியில் ஈடுபட்டு வருகிறனர். கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்கள் நெரிசலில் சிக்குவதை கட்டுப்படுத்த அங்காடி நிர்வாகம் சார்பில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு தனித்தனியாக பிரிந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்களின் பணிகளை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேரில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூராக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினார். அதேபோல் போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்களை நிறுத்தி பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வியாபாரிகள் தங்களது கடையில் பூஜை பொருட்களை விற்பனை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மார்க்கெட் வளாகத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றப்பட்டுள்ளது. அதை மீறி நடைபாதையை ஆக்கிரமித்து விபாபாரம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மார்க்கெட் வளாகத்தை 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. விதிமீறல்கள் தொடர்பாக அங்காடி நிர்வாகத்தில் புகார் அளிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தை முறைப்படுத்த தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement