தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்பாக்கம் அணுமின் நிலைய 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

சென்னை, நவ.26: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தப்பட்ட 2வது அணு உலை, பணி நிறைவடைந்து மீண்டும் உற்பத்தியை துவங்கியது. கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், 500 மெகாவாட் திறன் கொண்ட பாவினி அணுமின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில், சென்னை அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒவ்வொரு அணு உலைகளில் இருந்து தலா 220 மெகாவாட் என 2 அணு உலைகளில் இருந்து 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, அவைகளில் இருந்து உற்பத்தியாகும் 440 மெகாவாட் மின்சாரமும் மத்திய தொகுப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை மாநில வாரியாக அவைகளின் தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலாவது அணு உலை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்று வரை ஏதோ காரணங்களால் அது சரி செய்யப்படாமல், காட்சிப் பொருளாகவே உள்ளது. 2வது அணு உலை இயங்கி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1ம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அணு மின் நிலைய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களை கொண்டு பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நேற்று 2வது அணு உலை அதன் அணு உற்பத்தியை துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News