தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டின் முன் விளையாடியபோது தெருநாய் கடித்து குதறி 2 சிறுவர்கள் படுகாயம்

அம்பத்தூர், அக்.26: அம்பத்தூரில் தெருநாய் கடித்து குதறியதில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூர் ஒரகடம் கோவிந்தராஜ் தெருவைச் சேர்ந்த சிறுமி தண்மதி மற்றும் சிறுவன் கவிஷ் ஆகியோர் நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் சுற்றித்திரிந்த தெருநாய் ஒன்று திடீரென தண்மதி மற்றும் கவிஷ் ஆகியோரை விரட்டி சென்றது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தண்மதி, கவிஷ் உடனே வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அதற்குள் தெருநாய் இருவரையும் கடித்துக் குதறியது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தெருநாயை விரட்டி அடித்து, இருவரையும் மீட்டனர்.

Advertisement

பின்னர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகளையும் விரட்டிக் கடிக்கிறது. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. அதேபோல், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்திகொண்டு தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்கவும், சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்கவும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Advertisement

Related News