தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீட்டுக்கு செல்ல வழி தெரியாமல் தவித்த பள்ளி மாணவன் பாட்டியிடம் ஒப்படைப்பு

திருவொற்றியூர், அக்.25: மணலி புதுநகர் விச்சூர் பகுதியை சேர்ந்தவர் வில்சன் (37). ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்திம் இரவு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் வாடிக்கையாளர் வருகைக்காக காத்திருந்தார். அப்போது, அங்கு சிறுவன் ஒருவன் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதை பார்த்த வில்சன், சிறுவனிடம் விசாரித்தபோது, பழவேற்காடு பகுதியை சேர்ந்த லோகேஷ் (12) என்பதும், எர்ணாவூர் குப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருவதாகவும், பழவேற்காட்டில் தனது தாயை பார்த்துவிட்டு அங்கிருந்து மின்சார ரயிலில் வந்ததாகவும், எண்ணூர் ரயில்நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக தவறுதலாக சென்ட்ரலுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளான்.

Advertisement

இதையடுத்து வில்சன், எண்ணூரில் உள்ள போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜி என்பவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். பின்னர், சிறுவனை ஆட்டோவில் ஏற்றி எண்ணூருக்கு அழைத்து சென்று, உதவி ஆய்வாளர் ராஜியிடம் ஒப்படைத்தார். அவர், சிறுவன் கூறிய விலாசத்தை வைத்து எர்ணாவூர் குப்பத்தில் உள்ள அவரது பாட்டி நாயகம், தாத்தா தேசிங்கு ஆகியோரிடம் லோகேஷை ஒப்படைத்தார். சிறுவனை பாதுகாப்பாக பாட்டியிடம் ஒப்படைத்த உதவி ஆய்வாளரை காவல் உயரதிகாரிகள் பாராட்டினர். இதுபோல் ஆட்டோ டிரைவர் வில்சனையும் போலீசார் பாராட்டினர்.

Advertisement