தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் 1 லட்சம் ரூபாய் வரை அபராதம்: வணிக நிறுவனங்கள், பொதுமக்களுக்கு தாம்பரம் மாநகராட்சி எச்சரிக்கை

தாம்பரம், செப்.25: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்

Advertisement

டுள்ளது. இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்பட்ட நகரின் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசாணை 24.2.2024ன்படி, ஒருமுறையே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் தடிமன் வேறுபாடின்றி அனைத்து வகையான பிளாஸ்டிக் பைகளும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் ஸ்பூன், போர்க், கத்தி, பிளாஸ்டிக் தட்டுகள், உணவுப் பொட்டலத்திற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், ஒட்டும் படலம், சாப்பாட்டு மேஜையில் விரிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தகடுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் கோப்பைகள், பிளாஸ்டிக் தேநீர் கோப்பைகள், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கோப்பைகள், பிளாஸ்டிக் பூசிய கேரி பேக்குகள், நான் ஒவன் கேரி பைகள், தண்ணீர் பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் வைக்கோல், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் குச்சிகளுடன் கூடிய காது மொட்டுகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய், பிளாஸ்டிக் குச்சிகளைக் கொண்ட ஐஸ்கிரீம், அலங்காரத்திற்கான பாலிஸ்டிரீன், பிளாஸ்டிக் கரண்டி மற்றும் பிளாஸ்டிக் கத்திகள் போன்ற பொருட்கள் தமிழக அரசால் விற்பனை செய்வதற்கும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் தடை செய்யப்பட்

டுள்ளது.

எனவே வணிக நிறுவனங்கள் விதிகளை மீறி மேற்படி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் பொருட்களை பறிமுதல் செய்வதுடன் ரூபாய் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் விதிக்க நேரிடும். எனவே வணிக நிறுவனங்களும் பொதுமக்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, பயன்பாட்டினை தவிர்த்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும், துணிப்பைகளை பயன்படுத்திடவும், பிளாஸ்டிக்கை ஒழித்து சுற்றுச்சூழலை பாதுகாத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement