தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தண்டையார்பேட்டை ரயில் நிலைய சாலையில் கொட்டப்படும் கழிவுகள்: நோய் தொற்று பரவும் அபாயம்

தண்டையார்பேட்டை, செப்.24: சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், 42வது வார்டுக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் பகுதியில் புதிய வைத்தியநாதன் தெரு உள்ளது. தண்டையார்பேட்டை டோல்கேட், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள், பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்கள், பொதுமக்கள் என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் தண்டையார்பேட்டை ரயில் நிலையத்திற்கு இந்த வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில், திடீரென கடந்த சில நாட்களாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சேகரிக்கும் குப்பை கழிவுகளை பேட்டரி வாகனங்களில் கொண்டு வந்து இந்த பாலத்தின் கீழ் சாலையோரம் கொட்டி விட்டு செல்கிறார்கள். இதனால், குப்பை மலைபோல் குவிந்து காணப்படுகிறது.

Advertisement

மேலும் துர்நாற்றம் வீசுகிறது. ரயில் நிலையம் செல்லும் பொதுமக்கள் குப்பை கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாகவும், பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். தற்போது அடிக்கடி மழை பெய்வதால் குப்பையில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் இடமாக மாறி உள்ளது. அதேபோல், குப்பை கொட்டும் பகுதியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சுற்றுச்சுவர் உள்ளது. சமூக விரோதிகள் குப்பை கழிவுகளை கொளுத்தி விட்டு சென்றால் பெரும் விபத்து ஏற்படக்கூடும். இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் இந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுத்து, மாற்று இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement