தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாய்லாந்து சுற்றுலா சென்றபோது ஆழ்கடலில் வண்ண மீன்களை ரசிக்க சென்றவர் மூச்சுத்திணறி பலி: தனியார் நிறுவன துணை மேலாளரின் சோகம்

ஆலந்தூர், செப்.23: ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (43). இவர் சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேனேஜராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். திவாகரின் நிறுவனத்தின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் நிறுவனத்தின் பணியாளர்கள் 60க்கும் மேற்பட்டோரை தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்து சென்றனர். அதன்படி, கடந்த 15ம் தேதி இரவு திவாகர் தன்னுடைய நிறுவன ஊழியர்களுடன் தாய்லாந்துக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திவாகரின் வீட்டிற்கு அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் அதிகாரிகள் வந்து, தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற திவாகர் ஆழ்கடலில் வண்ண மீன்களை கடற்பாறையில் பார்க்க சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், உடனே கடற்பயிற்சியாளர் அவரை வெளியே கொண்டு வந்து முதலுதவி அளித்து சிகிச்சை கொடுத்ததாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் தகவல் அளித்தனர். தாய்லாந்தில் இருந்து திவாகரின் உடல் இன்று காலை சென்னைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Related News