தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளச்சேரியில் மாநகர பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

வேளச்சேரி, செப்.23: சென்னை தி.நகர் - கிளாம்பாக்கம் செல்லும் சென்னை மாநகர பேருந்து (தடம் எண் வி51இ) நேற்று காலை 7 மணி அளவில் வேளச்சேரி மெயின் சாலை வழியாக கேளம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தண்டீஸ்வரம் கோயில் அருகே திருப்பத்தில் சென்ற போது எதிரே வந்த வேளச்சேரி- கொளத்தூர் செல்லும் மாநகர பேருந்து (தடம் எம்51வி) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு பேருந்துகளின் முன் பகுதிகளும் சேதம் அடைந்தன. இந்த விபத்தில் வி51இ பேருந்து டிரைவர் மடிப்பாகத்தை சேர்ந்த அன்பழகன் (44) மற்றும் பேருந்தில் சென்ற பயணிகள் வேளச்சேரி, ஓரண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த நிறை பாண்டியன் (27), கோவிலம்பாக்கம், திருவேங்கடம் நகர், 2வது தெருவை சேர்ந்த தினகரன் (30), சந்தோஷபுரம், விக்னராஜபுரம் ஒன்றாவது மெயின் ரோடை சேர்ந்த விமலா (62), நன்மங்கலம் பார்த்தசாரதி கோயில் தெருவை சேர்ந்த அமல சசிகலா (50) உள்பட 8 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறர்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பேருந்துகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். பின்னர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சாலை குறுகலாக இருப்பதால் பேருந்து திரும்பும்போது பிரேக் பிடிக்காததால் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது.

Advertisement

Advertisement