தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம் மாநகராட்சியில் 10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி

தாம்பரம், ஆக.23: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 45,000 தெரு நாய்கள் மற்றும் 4000 முதல் 5000 வரை வளர்ப்பு நாய்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி, குறைந்தபட்சம் 70 சதவீத நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும்பட்சத்தில் நோய் கிருமி தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே, தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில், கடந்த 6ம் தேதி முதல் தாம்பரம் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை சார்பில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த முகாம், நாய் கடிக்கும்போது ஏற்படும் உயிருக்கு ஆபத்தான வெறிநோய் தடுக்க முக்கிய பங்காற்றுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘ கடந்த 6ம் தேதி 3வது மண்டலம், சிட்லபாக்கம் கால்நடை மருத்துவமனை வளாகத்திலிருந்து இந்த தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தெருநாய்களுக்கு 18ம் தேதி முதல், 4வது மண்டலத்தில் வெறிநோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை 10,167 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Advertisement