தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணி முடிந்து திரும்பியபோது கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து காவலர் பலி: பீகார் டிரைவர் கைது

புழல், செப்.22: மாதவரம் அருகே கன்டெய்னர் லாரி மோதி போக்குவரத்து காவல் பலியானார். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர். மாதவரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (50), மாதவரம் போக்குவரத்து பிரிவில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து புழலில் இருந்து மாதவரத்தில் உள்ள தனது வீட்டுக்கு பைக்கில் திரும்பியுள்ளார்.

Advertisement

மாதவரம் ரெட்டேரி அருகே வந்தபோது, செங்குன்றத்திலிருந்து துறைமுகம் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த ரவிக்குமார் மீது லாரி உரசியதில் வலது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு சதை தொங்கியது. ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த அவரை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி டிரைவரான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் ஷா (52) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News