தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணலியில் ரூ.13.50 கோடியில் நடைபெறும் 4 ஏரிகளின் சீரமைப்பு பணியை ஒன்றிய அரசு அதிகாரி ஆய்வு

திருவொற்றியூர், ஆக.22: மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்கவும், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்வதை தடுக்கவும் ஒன்றிய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.90 கோடியில் மணலி காமராஜர் சாலையில் உள்ள மணலி மாத்தூர் ஏரி, மாதவரம் ஏரி ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன், ஏரிக்கரையில் பொதுமக்களுக்கு நடைபாதை, ஜியோ செல் பிளாக் மேட் சாய்வு தளம் அமைத்து வெட்டி வேர் நடும் பணி நடைபெற்று வருகின்றன. இதேபோல், ரூ.2.16 கோடியில் மாத்தூர் கொசப்பூர் ஏரி, ரூ.2.44 கோடியில் ஆமுல்லைவாயல் ஏரி ஆகியவையும் தூர்வாரி சீரமைத்து, சாய்வு தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை அம்ரூத் திட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி அவனிஷ் சர்மா தலைமையில் மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) தேவேந்திரன், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் தர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, ஏரியின் தன்மை, மழைநீரை சேமிக்கும் முறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திட்ட பயன்பாடு ஆகியவை குறித்து கேட்டறிந்தனர். பருவமழை நெருங்குவதால் ஓரிரு மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

Advertisement

Advertisement