தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுதல் பணி வழங்கியதால் ஆத்திரம் தனியார் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர் சிக்கனார்

அம்பத்தூர், நவ.19: கொரட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முகப்பேர் சாலையில், யூனியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு நேற்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘உங்கள் வங்கியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும்’, என தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் விளையாட்டுக்கு சொல்வதாக நினைத்து, வங்கி ஊழியர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ச்சியாக 4 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அந்த மர்மநபர், வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்களை உடனடியாக வெளியேற்றினர். பின்னர், வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக கொரட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் வங்கியில் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால், இது வெறும் புரளி என்பது தெரிந்தது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்களை மாலை 6 மணி கடந்தும் பணியை செய்யும்படி கட்டாயப்படுத்தியதும், இதனால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் நந்தம்பாக்கத்தில் உள்ள தனது நண்பர் மூலம் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிந்தது. இதையடுத்து, அந்த வங்கி ஊழியர் மற்றும் அவரது நண்பரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement