தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூண்டி ஏரியில் இருந்து 2000 கன அடி உபரிநீர் திறப்பு

சென்னை, நவ.18: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வேகமாக நிரம்பியது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2382 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வினாடிக்கு 790 கன அடி மழைநீர் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 47 கன அடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement

* செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2952 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 165 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும், அணையின் பாதுகாப்பு கருதி ஏரியிலிருந்து வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 1200 கன அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

* புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 2827 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 45 கன அடி வீதம் நீர்வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் அணையின் பாதுகாப்பு கருதி புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 1200 கன அடியாக உயர்த்தி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

* சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 622 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து இல்லை.

* கண்ணன்கோட்டை ஏரியின்மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 435 மில்லியன் கன அடியாக உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை, சென்னை மாநகர மக்களின் குடிநீருக்காக வினாடிக்கு 2 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில், 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11,757 மில்லியன் கன அடியில் தற்போது 9,192 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement