தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார்த்திகை முதல் நாளையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பு

அண்ணாநகர், நவ.18: கார்த்திகை முதல் நாளையொட்டி நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்நிலையில், கார்த்திகை மாத முதல்நாள் என்பதால், நேற்று காலை முதலே பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சற்று உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.800லிருந்து, ரூ.1,200க்கும், ஐஸ் மல்லி ரூ.600ல் இருந்து 1,050க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.500ல் இருந்து ரூ.900க்கும், கனகாம்பரம் ரூ.500ல் இருந்து ரூ.1,800க்கும், அரளி பூ ரூ.200ல் இருந்து ரூ.300க்கும், சாமந்தி ரூ.100ல் இருந்து ரூ.150க்கும், சம்பங்கி ரூ.50ல் இருந்து ரூ.120க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80ல் இருந்து ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.100ல் இருந்து ரூ.150க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘கார்த்திகை முதல்நாள் என்பதால் காலை முதலே பூக்கள் வாங்குவதற்காக சென்னை மற்றும் புறநகர் சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால், பூக்களின் விலை உயர்ந்துள்ளது,’ என்றார்.

Advertisement

Advertisement