தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறப்பாக பணியாற்றிய 1100 பேருக்கு நலத்திட்ட உதவி தூய்மை பணியாளரின் சேவை போற்றத்தக்கது

Advertisement

சென்னை, அக்.18: தூய்மை பணியாளர்களின் சேவை மிகவும் போற்றத்தக்கது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 1,100 தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பிரியா ஏற்பாட்டில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, எழும்பூர் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்தது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை மிகுந்த பெருமையாக கருதுகிறேன். தன் வாழ்நாள் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்ட தந்தை பெரியாரின் திடலில், தூய்மைப் பணியாளர்களை சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றமைக்கு பெருமையாக கருதுகிறேன். தூய்மைப் பணியாளர்களான உங்களின் பணி மிகவும் போற்றத்தக்கது. அதுவும் குறிப்பாக மழைக் காலங்களில், கொரோனா காலங்களில் உங்களின் உழைப்பு யாராலும் அளவிட முடியாதது. களத்தில் எங்கள் எல்லோருக்கும் முன், எங்களுக்கு தைரியம் சொல்லி களத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டவர்கள் நீங்கதான்.

தலைநகர் சென்னையை தூய்மையாக பராமரிக்கும் பெருமை வாய்ந்த இந்த தூய்மைப் பணியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் எனக்கு மிகுந்த பெருமையை நான் தேடிக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, பரந்தாமன் வெற்றி அழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், மாநில நிர்வாகிகள் தமிழன் பிரசன்னா, டாக்டர் யாழினி, பரிதி இளம்சுருதி, பகுதி செயலாளர்கள் வேலு, சுதாகர், சரிதா மகேஷ் குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வானவில் விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement