தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லாவரம் - திருநீர்மலை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து

பல்லாவரம், ஆக.18: பல்லாவரத்தில் இருந்து பம்மல் சங்கர் நகர், காமராஜபுரம் வழியாக திருநீர்மலை செல்லும் சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான வாகனங்கள் இந்த சாலையில் பயணித்து வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில், சமீப காலமாக இரவு நேரங்களில் அதிகளவில் எருமை மாடுகள், கும்பல் கும்பலாக சாலையில் படுத்துக் கிடக்கின்றன.

Advertisement

இதனால், இவ்வழியாக பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, நான்கு சக்கர வாகன ஓட்டிகளும் இதே நிலையில் தான் பயணிக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு போன்ற உயிர்காக்கும் வாகனங்கள் இந்த மாடுகள் மோதி விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

ஏற்கனவே பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே, சாலையில் படுத்து கிடக்கும் மாடுகளை பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

 

Advertisement

Related News