தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபர் கொலை வழக்கில் 10 ஆண்டாக தேடப்பட்ட ரவுடி ஆந்திராவில் கைது

சென்னை, செப்.16: எண்ணூர், வஉசி நகரை சேர்ந்த தேவபிச்சை என்பவரின் மகன் ஜான்சன் (37) என்பவரை, முன்விரோத தகராறில் அத்திப்பட்டு பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு 4 பேர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இந்த வழக்கு தொடர்பாக ராஜி, சீனிவாசன், ரஹ்மான், உலகநாதன் ஆகிய 4 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதில் அத்திப்பட்டு, புதுநகரை சேர்ந்த திருப்பதி ராவ் என்பவரின் மகன் சீனிவாசன் வழக்கு விசாரணைக்காக, நீதிமன்றத்தில் ஆஜராகாமல், கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவானார்.

Advertisement

இதுகுறித்து, உதவி ஆணையர் ராஜா ராபர்ட் மேற்பார்வையில், மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலுமணி தலைமையில் உதவி ஆய்வாளர் பழனிவேல், காவலர்கள் சந்தோஷ்குமார், வேல்முருகன், மோகன் முரளி ஆகியோரை கொண்ட தனிப்படை போலீசார், நீண்ட காலமாக தலைமறைவான சீனிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவான கொலை குற்றவாளி சீனிவாசன் ஆந்திராவின் கொத்தகோடா பகுதியில் பதுங்கியிருப்பதாக நேற்று முன்தினம் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சீனிவாசனை கைது செய்து, மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர். தொடர்ந்து, சீனிவாசனிடம் மீஞ்சூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement