தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆந்திர மீனவர் அடித்து கொலை: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: எண்ணூர் கேவிகே குப்பத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (41). இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பேரூரை சேர்ந்த சீனு (35) என்பவர், கடந்த ஒரு மாதமாக மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார்.

Advertisement

இந்நிலையில், கடந்த வாரம் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சீனு, பாஸ்கரய்யா (47), வெங்கடேசன் (50), கொன்னூர் சீனு (55), தண்டையார்பேட்டை வஉசி நகரை சேர்ந்த செல்வம் (54), பிரசாந்த் (29) ஆகிய 7 பேர் சென்றுள்ளனர். பின்னர், மீன்கள் பிடித்துகொண்டு கடந்த 11ம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகம் வந்துள்ளனர்.  மீண்டும் கடலுக்கு செல்ல தயாராக இருந்துள்ளனர்.

அப்போது, சீனு மாயமானதால் சக மீனவர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது, இன்ஜின் அறையில் இறந்துகிடந்துள்ளார். இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீனுவின் வலது பக்க கழுத்து பகுதியில் கயிறு இறுக்கிய அடையாளம் இருந்துள்ளது. மேலும் இடது பக்க முதுகு, இடுப்பு, பகுதியில் சிராய்ப்பு இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை யாரேனும் அடித்து கொன்றனரா என விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காசிமேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Advertisement