தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு: மூதாட்டி படுகாயம்

சென்னை: ராயப்பேட்டையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது நஸ்ரூதின். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் திருவல்லிக்கேணி மார்கெட் சென்ற போது, அங்கிருந்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் ஒன்று இவரை கடித்திருக்கிறது.

Advertisement

இதனையடுத்து அவர் ரேபிஸ் தடுப்பூசியை போட்டிருக்கிறார். ஆனால், உடல் நலம் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார்.

அதேபோல், ராயப்பேட்டை நாயர் வரத பிள்ளை தெருவை சேர்ந்தவர் லட்சுமி (65), அதே பகுதியில் வசித்து வரும் தனது மகள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பழனி என்பவரின் வளர்ப்பு நாய் மூதாட்டி லட்சுமியின் வலது காலில் கடித்துள்ளது. இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Advertisement