தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் 21ம் தேதி செயல்படாது

அண்ணாநகர், அக்.14: கோயம்பேடு மார்க்கெட்டில் 1900க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்கறிகளை அனுப்பும் உழவர்களும், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், வியாபாரிகள் கலந்துகொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை விடுவதற்கு முடிவு எடுத்தனர்.

Advertisement

இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் ஒருங்கிணைந்த அனைத்து கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் கூறுகையில், ‘விவசாயிகள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என்பதால், அன்று காய்கறிகளை பறித்து அனுப்பும் பணிகள் நடைபெறாது. லாரி ஓட்டுநர்களும் தங்கள் குடும்பத்தோடு தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். அதன் காரணமாக தீபாவளிக்கு அடுத்த நாளான 21ம் தேதி காய்கறிகள் மார்க்கெட்டிற்கு காய்கறி வராது. அதனால் 21ம் தேதி கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.

Advertisement