தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனை: மக்கள் கூட்டம் அலைமோதியது

சென்னை, அக்.14: தமிழக அரசு உதவியுடன் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு உதவியுடன் சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளில் விற்பனையை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு தீவுத்திடலில் 11ம் ஆண்டாக பட்டாசு கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளில் சுமார் 20 கோடி ரூபாய் அளவிற்கு வியாபாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த கடைகள் மூலமாக பலனடைவார்கள். இதன் மூலமாக அவர்களின் வாழ்வாதாரம் சிறக்கும். தீபாவளி முடிந்த ஓரிரு நாட்களில் இந்த பட்டாசு வியாபாரம் நிறைவு பெறும். இந்த பட்டாசு வியாபாரம் மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் உரிய பாதுகாப்பும் அடிப்படை தேவைகளான கழிப்படை வசதி மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த பட்டாசு கடைகள் முன்கூட்டியே அமைப்பதற்கும் பட்டாசு கடைகளில் வியாபாரத்தை இன்றைக்கு தொடங்குவதற்கு அரசு பெரும் உதவியாக இருந்ததை வியாபார பெருமக்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். 30 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. பட்டாசு வியாபாரிகள் மேலும் கூடுதலாக கடைகள் அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தால் கூட அதற்கு அரசு ஏற்பாடுகள் செய்ய தயங்காது. ஒரு வாரம் காலம் முதலாகவே இங்கு கடைகள் அமைக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் நடத்தப்பட்டது. இது முதலாளிகள் தொழிலாளிகள் சார்ந்த வியாபாரம் என்ற காரணத்தினால் அனைத்து தரப்பினரும் பலன் பெறும் வகையில் ஏற்பாடுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த பட்டாசு கடைகளில், சிவகாசி விருதுநகர் போன்ற மாவட்டங்களை சார்ந்த உயர்தர பட்டாசுகள் மட்டுமே விற்கப்படுகிறது. பட்டாசு வியாபாரிகள் இந்த மாவட்டத்தில் இருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்து தொழிலாளிகள் போக்குவரத்து ஆகிய செலவினங்களை கணக்கில் வைத்து அதில் சிறிதளவு லாபம் கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகள் வாங்க குவிந்தனர்.

Advertisement