தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மணி எக்சேஞ்ச் நிறுவனத்தில் ரூ.1.48 லட்சம், லேப்டாப் திருடிய ஊழியர் கைது

சென்னை, ஆக. 14: சூளைமேடு பகுதியில் கடன் தொல்லையால் மணி எக்சேஞ்ச் நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் ரொக்கம், லேப்டாப் திருடிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம்(24). இவர் அதே பகுதியில் மணி எக்சேஞ்ச் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு நிறுவனத்தை பூட்டிவிட்டு மறுநாள் காலையில் திறக்க வந்த போது, பூட்டு திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே சென்றார். அப்போது, அவரது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.1.48 லட்சம் ரொக்கம் மற்றும் விலை உயர்ந்த லேப்டாப் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அப்துல் கரீம் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியபோது, அப்துல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் எம்.கே.பி.நகரை சேர்ந்த அவரது நண்பர் சரத்(22) பணம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சரத்தை பிடித்து விசாரித்தனர். அதில், கடன் தொல்லை காரணமாக பணம் மற்றும் லேப்டாப் திருடியதாக ஒப்புக்கொண்டார். அதைதொடர்ந்து போலீசார் சரத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர்.