தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதலுக்காக விஷம் கொடுத்து குழந்தைகள் கொலை ஆயுள் தண்டனையை எதிர்த்து குன்றத்தூர் அபிராமி மேல்முறையீடு: காவல்துறை பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஆக. 13: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து குன்றத்தூர் அபிராமி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். குன்றத்தூரைச் சேர்ந்த விஜய் அபிராமி தம்பதி. இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதுகளில் 2 குழந்தைகள் இருந்தனர். அபிராமி வீட்டில் இருந்தபடி டிக்டாக்கில் வீடியோ போட்டு பிரபலமானார். இவரது வீடியோவை பார்த்து, அதேபகுதியில் பிரியாணி கடையில் பணியாற்றிய மீனாட்சி சுந்தரத்துக்கும், அபிராமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் கள்ளகாதலாக மாறியது. இந்த கள்ளக்காதலுக்கு குழந்தைகள் இருவரும் இடையூறாக இருந்ததால், அவர்களை கொலை செய்ய அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் முடிவு செய்து பாலில் விஷம் கலந்துக் கொடுத்து குழந்தைகளை கொன்றனர். பின்னர், இருவரும் கேரளாவுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது போலீசார் கைது செய்து இருவர் மீதும் கொலை, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கிற்கு பதில் அளிக்குமாறு போலீசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Advertisement

Advertisement

Related News