தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரியல் எஸ்டேட் அதிபரின் கார் பறித்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் கைது

பெரம்பூர், டிச. 12: அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (53), ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் செங்கோடன் என்பவரது நிலத்தை விற்று கொடுத்துள்ளார். செங்கோடனின் மருமகள் பாரதி என்பவர் தனது சொத்தை தனக்கு தெரியாமல் விற்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்தனர். மேலும், பாரதி பிரச்னையை பிரபல ரவுடி நாகேந்திரனின் இரண்டாவது மகன் அஜித் ராஜ் மூலம் பஞ்சாயத்து பேச வேண்டும் என்று கூறி லோகநாதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே வரச் சொல்லி தனது ஆட்களை வைத்து மிரட்டி லோகநாதனின் காரை பறித்து சென்றார்.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகநாதன் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், எம்கேபி நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் பிரபல ரவுடி உயிரிழந்த நாகேந்திரனின் 2வது மகன் அஜித் ராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர் வேறு ஒரு வழக்கில் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் வியாசர்பாடி கென்னடி நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராகுல்(30) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வந்த நிலையில் அஜித்ராஜின் நண்பரான வியாசர்பாடி எம்கேபி நகர் 15வது பிரதான சாலையைச் சேர்ந்த பிரகாஷ் (34) என்பவரை நேற்று எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர். இவர் வடசென்னை மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். சம்பவத்தன்று அஜித் ராஜ் கூறியதன்பேரில் லோகநாதனின் காரை பறித்து சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் மனோஜ் குமார், கிஷோர், நிர்மல் குமார் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Related News