தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7 சவரன் செயின் பறிக்கப்பட்டதாக எஸ்ஐ மகள் பொய் புகார்

அண்ணாநகர், டிச.12: கோயம்பேடு காவல் நிலைய சட்டம், ஒழுங்கு உதவி ஆய்வாளர் காஞ்சனாவின் மகள் கமலயோகினி (26), காட்டுப்பாக்கம் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கிண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேற்று முன்தினம் நேர்முக தேர்வுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து பேருந்து மூலம் கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார். அங்குள்ள கழிவறைக்கு சென்றபோது அவர் கழுத்தில் கிடந்த 7 சவரன் தாலி செயினை மர்ம நபர் பறித்துக் கொண்டு தப்பியதாக கமலயோகினி கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கமலயோகினி கழிவறையை விட்டு எந்த ஒரு பதற்றமும் இன்றி வெளியே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அவரிடம் மர்ம நபர் தாலி செயினை பறித்து செல்லவில்லை என்பது உறுதியானது. மேலும், அன்றைய தினம் கிண்டியில் உள்ள தனியார் கம்பெனிக்கு நேர்முக தேர்வுக்கு சென்றதாக நாடகமாடியதும் அம்பலமானது. மேலும் எதற்காக தாலி செயின் பறித்ததாக பொய் புகார் அளித்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News